எம் இனிய
ஈகைத் திருநாள் வாழ்த்துகள் …!
* *
இந்த உலகில் எல்லாருக்கும் அருள்பாலிப்பவனும்
மறுமையில் தன்னை நம்பி, தனக்கு அடிபணிந்து நடந்த அடியார்களுக்கு மேலதிகமாக அன்பு செய்பவனும் ஆன
வல்ல அல்லாஹ்,
தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும்,
இதயத்தில் அன்பையும்,
ஆன்மாவில் மெய்நம்பிக்கையை(ஈமானை)யும்,
சிந்தனையில் ஞானத்தையும்,
செயல்களிலே நன்மைகளையும்
செல்வத்தில் தூயவற்றையும்
வெள்ளமென வெளிப்படுத்துவானாக …
ஆமீன் ….
இன்பத் திருநாள் இருமை வாழ்விற்கே! பெருநாள் வாழ்த்துக்கள்
எல்லோரும் இன்புற்று வாழ இவ்வினிய நேரத்தில் எல்லாம் வல்ல
அல்லாஹ்வின் (இறைவனது) அருள் நாடி இறைத்தூதர் நபி அவர்கள்
காட்டிச் சென்ற தியாகத் பெருநாளில் வேண்டுவோம். அனைத்துப் புகழும்
அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும்
நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.
அ முஹம்மது அலி ஜின்னா(“நீடூர்அலி”)
இன்பத் திருநாள் இருமை வாழ்விற்கே!
பெருநாட்கள் அல்லது பண்டிகைகள் அரபி மொழியில் “ஈத்” என அழைக்கப்படுவது உண்டு. ஈத் என்றால் மீண்டும் மீண்டும் வருதல் என்ற கருத்தை கொடுக்கின்றது. ஆண்டு தோறும் வருவதால் பெருநாட்களுக்கு இவ்வாறு பெயர்கள் உண்டு!
இஸ்லாத்தை பொறுத்தமட்டில் ஆண்டு தோறும் இரண்டு பெருநாட்கள் மட்டுமே! அவை தவிர ஒவ்வோர் வார இறுதியிலும் வெள்ளிக் கிழமை நாள் முஸ்லிம்களுக்கு பெருநாளாக கருதப்படுகிறது. இது தவிர வேறு எவ்விதமான கொண்டாட்டங்களும் இஸ்லாத்தில் கிடையாது!
பெருநாட்களின் நோக்கம்!
யாவற்றையும் அறிந்த வல்ல இறைவன் மிக உன்னதமான நோக்கத்தின் அடிப்படையில் இரு பெருநாட்களையும் அவனது நல்லடியார்களுக்கு நன்கொடையாக…
View original post 834 more words